Free Web Hit Counters
எல்லா நதிகளும் கடலை நோக்கி.... எல்லா மனித நேயப் பயணங்களும் காரல் மார்க்ஸை நோக்கி.....!
"புத்தம் புது பூமி! வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும்....." -கவிப்பேரரசு வைரமுத்து.....







"அரசியல் கோமாளிகளின் நையாண்டி நக்கல் காமெடி கலாட்டா!"

Thursday, February 21, 2008

www.thamuyesa.org

pls visit

thamuyesa.org




தமுஎச-இந்த நான்கு எழுத்துக்கள் தமிழகமெங்கும் சிறு நகரங்கள் வரை பரவலாக மக்களுக்கு அறிமுகமான ஒரு அமைப்பை-ஓர் இயக்கத்தைக் குறிக்கும் எழுத்துக்களாகும். ஆம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இன்று ஒரு மகத்தான மக்கள் கலை இலக்கிய இயக்கமாகப் பரவி வளர்ந்து கொண்டிருக்கிறது.
1975 ஆம் ஆண்டு ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில் மதுரையில் தமுஎச வின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. 2005 செப்டம்பர் 30, அக்டோபர் 1,2 ஆகிய தேதிகளில் எங்கள் பத்தாவது மாநில மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்றது.
இடைப்பட்ட இந்த முப்பது ஆண்டுகளில் தமிழகக் கலை இலக்கிய உலகில் ஒரு புறக்கணிக்க முடியாத சக்தியாக எல்லா மாவட்டங்களிலும் கிளை விரித்துச் செயல்படுகிற ஒரே கலை இலக்கிய இயக்கமாக தமுஎச எழுந்து நிற்கிறது. நச்சுக்கலை இலக்கிய எதிர்ப்பையும் நல்ல கலை இலக்கிய வளர்ப்பையும் தன் சாரமாகக் கொண்டு எழுத்தாளர்கள், கலைஞர்கள், கலைக்குழுக்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் எனப் பல மனங்களை ஒருங்கிணைக்கும் சக்தியாகவும் கலை இலக்கிய உரிமை காத்திடக் களம் இறங்கும் அமைப்பாகவும் தமுஎச நிமிர்ந்து நிற்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் நாடகக் குழுக்களின் மூலமாக வீதி நாடக மற்றும் மேடை நாடக வடிவில் முற்போக்கான சிந்தனைகளை, உணர்வுகளை மக்களிடம் எடுத்துச் செல்கிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த சிறுகதை, கவிதை, குழந்தை இலக்கியம், மொழிபெயர்ப்பு, தமிழ் வளர்ச்சி, நாவல், நூல்களுக்கும் திரைப்படங்களுக்கும் தமுஎச விருது வழங்குகிறது. இளம் படைப்பாளிகளின் திறன்களை வளர்த்திட பட்டறைகள், பயிற்சி முகாம்கள் நடத்துகிறது. கலை இரவு என்னும் புதிய வடிவம் தமுஎச தமிழ்கூறு நல்லுலகுக்கு அளித்த கொடை என்று தயக்கமின்றிக் கூறலாம்.
கிளைகளில் மாவட்டங்களில் மாதந்தோறும் நூல் அறிமுக நூல் விமர்சனக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. புதிய நூல்கள், ஒலி நாடாக்கள், இசைப் பேழைகள், குறுந்தகடுகள் வெளியிடப்படுகின்றன. இப்போது ஆவணப்பட, குறும்படத் தயாரிப்பிலும் தமுஎச படைப்பாளிகள் ஈடுபட்டுள்ளனர்.
தமுஎச வில் இணைகின்ற படைப்பாளிகள், வாசகர்கள், ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் தமுஎச வோடு இயங்குவதை ஓர் அர்த்தமுள்ள வாழ்வனுபவமாக உணர்கிறார்கள். சொந்த வாழ்வின் சோகங்களையும் சோர்வுகளையும் அவ நம்பிக்கைகளையும் கழற்றி எறிந்து நித்தம் நவமெனச் சுடர் விடும் படைப்பு மனநிலையில் திளைக்கிறார்கள். சமூக அக்கறையுள்ள மனிதர்களாக வாழத்துவங்குகிறார்கள்.
இவ்வரிகளை வாசிக்கிற நீங்களும் எங்கள் பெரும் கலைப்படையில் இணைந்திட வேண்டுமென அன்புடன் இருகரம் நீட்டி அழைக்கிறோம். சிதைந்து வரும் நம் பண்பாட்டுச் சூழலை முற்போக்கான கலை இலக்கிய வடிவங்களோடு எதிர் கொண்டு மக்களுக்கான புதிய பண்பாட்டை உருவாக்குவோம்.

மாநிலக்குழு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
57/11, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை - 625 001
மாநிலச் செயலர் செல்பேசி : 94436 95553

No comments: