Free Web Hit Counters
எல்லா நதிகளும் கடலை நோக்கி.... எல்லா மனித நேயப் பயணங்களும் காரல் மார்க்ஸை நோக்கி.....!
"புத்தம் புது பூமி! வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும்....." -கவிப்பேரரசு வைரமுத்து.....







"அரசியல் கோமாளிகளின் நையாண்டி நக்கல் காமெடி கலாட்டா!"

Friday, June 20, 2008

தோழர் ஜீவா




1963 ஆம் ஆண்டு தமிழகத்தின்
காரல் மார்க்ஸ் என்று அழைக்கப்படும்
தோழர் ஜீவா அவர்கள்
"ஜனசக்தி" பத்திரிக்கை
அலுவலகத்தில் எழுத்துப்
பணியில் மும்முரமாக
ஈடுபட்டிருந்தார்.

அப்பொழுது இரு
இளம்பெண்கள் "ஜீவா"
இருக்கிறாரா என்று தயங்கி
தயங்கி கேட்டு ,
அனுமதிக்கபட்ட பிறகு
அவர்களிலிருவரும் ஜீவா
முன் சென்று அமர்ந்தனர்.

ஜீவா தன் இயல்பான
பரிவுக்குரலுடன், "
என்னம்மா வேண்டும்!" என்று
கேட்டார்.

"உங்களைத்தான் பார்க்க
வந்தோம் !" என்று ஒரு பெண்
கூறினாள்.

"நீ யாரம்மா ?"
என்று இருவரில்
பேசாமல் இருந்த பெண்ணைப்
பார்த்துக் கேட்டார்,ஜீவா.

அந்த பெண்ணும் பதில்
எதுவும் சொல்ல வில்லை.

ஏற்கனவே பேசிய அதே பெண்
திரும்பவும், "நாங்கள்
ஆசிரியப் பயிற்சி முடித்த
மாணவிகள்" என்றாள்.

மீண்டும் ஜீவா,பேசாமல்
தன்னையே பார்த்துக்
கொண்டிருந்த
இளம்பெண்ணைப் பார்த்து ,

மீண்டும்"நீ யாரம்மா?" என்று கேட்டார்.


அப்பெண்ணின் கண்கள்
கலங்கின.ஒரு துண்டுக்
காகிதத்தை அப்பெண்
ஜீவாவிடம் நீட்டினாள்,
அதில்

"எனது தாத்தாவின் பெயர்
குலசேகரதாஸ். எனது
அன்னையின் பெயர் கண்ணம்மா.
உங்கள் மகள் நான்" என்று
எழுதியிருந்தது.

அந்த வாக்கியங்களை
வாசித்து திகைத்துப் போன
ஜீவா அதே துண்டுக்
காகிதத்தின் இறுதியில்
"என் மகள்" என்று எழுதி அந்த
இளம் பெண்ணிடம்
நீட்டினார்,ஜீவா.

அந்த வார்த்தைகளை கண்
கொட்டாமல் பார்த்துக்
கொண்டே இருந்தாள்,அந்த
இளம் பெண்.

எழுதிய
துண்டுக்காகிதத்தை ஜீவா
திரும்பக் கேட்டார்.
அப்பெண் அதைக் கொடுக்க
வில்லை!

"என் மகள் என்று
சொல்வதற்குக்
கூச்சப்பட்டுத்தானே
தலையைச் சுற்றி மூக்கைத்
தொடுகிறாய் ",என்று ஜீவா
மனம் திறந்து கேட்டே
விட்டார்.

அப்பெண் சிரிப்பினால்
பதில் சொன்னாள் .

பிறந்தது முதல் பதினேழு
ஆண்டுக்காலம் தந்தை
ஜீவாவைக் கண்டிராமல்,
இப்பொழுது துண்டுக்
காகிதம் கொடுத்து
அறிமுகம் செய்து கொண்ட
அந்த பெண்ணின் பெயர்
குமுதா!

No comments: